சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக மன்னார்…

மன்னார் மாவட்டத்தை சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக விருத்தி செய்வதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதுடன், இதற்கான நவீன உட்கட்டமைப்பு வசதிகளை கனேடிய அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுக்க முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் அதிகாரிகளை மன்னாருக்கு அனுப்பி, அங்குள்ள சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்கள் குறித்த ஆய்வறிக்கை ஒன்றை தயாரிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.