சுழற்சி முறைமையிலான மின்வெட்டு இன்றுடன்(10) நிறைவு…

(FASTNEWS | COLOMBO)- தற்போது அமுல்படுத்தப்படும் சுழற்சி முறைமையிலான மின்சார தடை இன்று(10) நள்ளிரவின் பின்னர் நிறைவுறுத்தப்படும் என மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாளை(11) முதல் சீரான மின்சார விநியோகம் இடம்பெறும் என குறித்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தற்போது அமுல்படுத்தப்படும் மின்சார தடையை நிறுத்துவதற்காக 500 முதல் 600 மெகாவோட் மின்சாரம் தேசிய மின்சார கட்டமைப்பில் இணைக்கப்படவுள்ளதுடன் எதிர்காலத்தில் மின்சாரத்தை கொள்வனவு செய்வது தொடர்பான யோசனை ஒன்றை மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று(09) அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.