சுவாச கோளாறு காரணமாக நீதியான சமூகத்திற்கான மக்கள் அமைப்பின் தலைவர் மாதுளுவாவே சோபித தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று வியாழன் இரவு சோபித தேரர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
சோபித்த தேரரின் உடல் நிலை தற்போது முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், இன்றைய தினமும் பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலை அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
(riz)