(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிட்சர்லாந்து தூதரக பெண் அதிகாரி கானியா பெனிஸ்டர் பிரான்சிஸ் (Ganiya Banister Francis) பொய்யான தகவல்களை வழங்கியதாக தெரிவித்து அவரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு சட்டமா அதிபரால் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுவிஸ் தூதரக அதிகாரியை கைது செய்ய உத்தரவு