சூரிய ஒளி மின்சார திட்டத்தின் ஊடாக நுகர்வோருக்கும் வருமானம்…

அனைத்து நுகர்வோருக்கும் வருமானம் ஈட்டிகொள்ளக்கூடிய முறையொன்றை சூரிய ஒளி மின்சார திட்டத்தின் ஊடாக ஏற்படுத்தவுள்ளதாக மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

புதிய முறையின் கீழ் சூரிய மின் உற்பத்தி திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டுள்ள தரப்பினரிடமிருந்து விலை கோரல், பெப்ரவரி மாதம் ஆரம்பமாகவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலன்னறுவை – வெலிகந்த பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள 10 மெகாவோல்ட் சூரிய மின்சக்தி உற்பத்தி நிலையத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.