அண்மையில் மேற்கொள்ளப்பட்ட தண்டப்பணம் அதிகரிப்பில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாத பட்சத்தில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 15ம் திகதி பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படும் என அகில இலங்கை தனியார் பேரூந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.
பழைய தண்டப்பணம் அறவீடுகளை பின்பற்றுவதற்கு அரசாங்கம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அது தவறும் பட்சத்தில் தொடர்சியான பணிப்புறக்கணிப்பினை முன்னெடுக்க தயார் எனவும் குறித்த சம்மேளனத்தின் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் மேலும் தெரிவித்திருந்தார்.