(FASTNEWS|COLOMBO) – வெல்லம்பிட்டிய செப்புத் தொழிற்சாலை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 10வது சந்தேக நபரை தொடர்ந்தும் ஜூலை மாதம் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டல் தற்கொலை குண்டுதாரி இன்ஷாப் அஹமட் குறித்த சந்தேக நபரின் பெயரில் அவருக்கு மூன்று காசோலைகளை வழங்கியுள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் பயங்கரவாத விசாரணை பிரிவினர் இன்று(24) நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.