உச்ச நீதிமன்ற நீதிபதி ஈவா வணசுந்தர இன்று(14) தனது சேவையில் இருந்து ஓய்வு பெறுவதாக உச்ச நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று(14) உச்ச நீதிமன்றத்தில் ஈவா வணசுந்தர, புவனேக அலுவிகாரே மற்றும் விஜித் மலல்கொட ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வின் போது ஈவா வணசுந்தர தனது 40 வருட கால சேவையில் இருந்து ஓய்வு பெறுவதாக நீதியரசர் புவனேக அலுவிகாரே அறிவித்துள்ளார்.