மாலபே, சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமேல் மாகாணத்தின் மருத்துவர்கள் இன்று(27) காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை சேவைப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளனர்.
இதற்கு முன்னர் அரசாங்க மருத்துவர்கள், ஊவா, தென், வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களில் இந்த பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.