மாலபே, சைட்டம் தனியார் நிறுவனம் தொடர்பில் அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வழக்கில் சட்டமா அதிபரின் செயல்பாடு தொடர்பில் உடனடியாக விசாரணை இடம்பெற வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று(06) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) உதவிச் செயலாளர் மருத்துவர் ஹரித அளுத்கமகே இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.