சைட்டம் நிறுவனத்தின் மாணவர்களது பிரச்சினை குறித்து ஆராய்ந்து அது குறித்து தொகுக்கப்பட்ட தீர்வுத் திட்டத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்க அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த சங்கத்தின் ஊடகக் குழுவின் உறுப்பினர் டாக்டர் பிரசாத் கொலம்பகே தெரிவிக்கையில்,
சைட்டம் நிறுவனத்தில் பயிலும் மாணவர்களுக்கு வைத்திய பட்டத்தினை பெறக்கூடிய வகையில் குறித்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார். அதற்கு அநேகமான தரப்பினர் உடன்பட்டிருப்பதாகவும், குறிப்பாணை போன்ற வடிவில் ஜனாதிபதியிடம் கையளிக்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் டாக்டர் பிரசாத் கொலம்பகே குறிப்பிட்டிருந்தார்.
#rishma