தமது காரின் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொய் முறைப்பாட்டை மேற்கொண்ட சைட்டம் நிறுவனத்தின் முன்னாள் மேலாளர் சமீர சேனாரத்னவின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் ஜுலை 12ம் திகதி வரை நீடிக்க இன்று(28) கடுவலை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் அவரது வாகனத்துக்கு தூப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்ட போது, இந்த தாக்குதல் அவரால் திட்டமிட்டு நடத்தப்பட்டது என்று விசாரணைகளில் தெரிய வந்தது.
இந்த திட்டத்துக்காக குறித்த வைத்தியர், கடுவலை நகர சபையின் சுதந்திர கட்சி உறுப்பினராக அருன லக்மால் விலத்கமுவவிடம் 50 லட்சம் ரூபாய் நிதியை கொடுத்திருந்ததாக, இன்று நீதிமன்ற விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டது.