சைட்டம் நிறைவேற்று அதிகாரி மீதான துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் அறிக்கை…

மாலபே, சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியின் பிரதான நிறைவேற்று அதிகாரி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்திற்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று(07) இடம்பெற்ற அமர்வின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பிய போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மாலபே தனியார் மருத்துவ கல்லூரி தொடர்பில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டங்களை நடத்துவதைத் தவிர்த்து, மேன்முறையீடு செய்யுமாறு சபை முதல்வரும், அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.