மாலபே, சைட்டம் மருத்துவக் கல்லூரி தொடர்பான சர்ச்சையினை முன்னிறுத்தி எதிர்வரும் 5 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA)தெரிவித்துள்ளது.
சுகாதாரம், ஆசிரியர், போக்குவரத்து உள்ளிட்ட பல தொழிற்சங்கங்களின் பங்குபற்றலில் குறித்த இந்த பணிப்புறக்கணிப்பு இடம்பெறவுள்ளதாக அந்த சங்கத்தின் உதவி செயலாளர் மருத்துவர் ஹரித அளுத்கே எமது செய்தி பிரிவுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனை குறிப்பிட்டுள்ளார்.