சோமவங்ச 27 ஆம் திகதி புதிய கட்சி அங்குரார்ப்பணம்

மக்கள் விடுதலை முன்னணியிலிருந்து விலகிச் சென்ற அக்கட்சியின் முன்னாள் தலைவர் சோமவங்ச அமரசிங்க எதிர்வரும் 27 ஆம் திகதி புதிய அரசியல் கட்சியொன்றை அமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புதிய கட்சியின் ஸ்தாபனம் மற்றும் கட்சிக்கான புதிய அதிகாரிகள் தெரிவு என்பன கொழும்பில் நடைபெறவுள்ள விசேட மாநாட்டின் போது இடம்பெறவுள்ள அக்குழுவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள கட்சியில் மக்கள் விடுதலை முன்னணியின் பல சிரேஷ்ட உறுப்பினர்கள் இணைந்துகொள்ளவுள்ளதாகவும் இதற்காக பல கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்