சோமாலியா வெடிகுண்டு தாக்குதல்; 90 பேர் உயிரிழப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –சோமாலியாவில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 90 ஆக அதிகரித்துள்ளது.

சோமாலியா தலைநகர் மொகடிஷூவில் உள்ள பாதுகாப்பு சோதனைச் சாவடியில் உள்ள வரி செலுத்தும் மையத்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நேற்று தாக்குதல் நடத்தினர்.

சோமாலியாவில் அல்கொய்தா அமைப்புடன் தொடர்புடைய அல்ஷபாப் பயங்கரவாத அமைப்பு, தொடர்ந்து வன்முறைத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. குறிப்பாக சோதனைச் சாவடிகள், விடுதிகள் மற்றும் கடலோர பகுதிகளை குறிவைத்து தாக்குதகள் நடத்தப்படுகின்றன.