பிரஜைகளின் சகல தகவல்களும் உள்ளடங்கியதாக டிஜிட்டல் அடையாள அட்டை அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த அடையாள அட்டைகள் பிரதேச செயலாளர் காரியாலயங்கள் ஊடாக வழங்கப்படவுள்ளன.
பிரஜைகளின் வாழ்க்கை நிலைமைகள் மற்றும் அரச நிறுவனங்களுடனான அவர்களின் செயற்பாடுகள் உள்ளிட்ட தகவல்கள் இந்த அடையாள அட்டைகளில் உள்ளடக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
17 வயதை பூர்த்தி செய்த அனைவருக்கும் இந்த டிஜிட்டல் அட்டைகள் வழங்கப்படவுள்ளன.