(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் ஜனவரி மாதம் 03ம் திகதி ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய பிறகு அந்நாள் மதியம் 01 மணிக்கு சபை அமர்வுகளை முன்னெடுக்க கட்சியின் தலைவர் கூட்டத்தில் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய குறித்த கலந்துரையாடலில் பாராளுமன்ற ஆசன ஒதுக்கீடு தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.