ஜனாதிபதிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயார்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த பாராளுமன்றத்தில் முழு ஒத்துழைப்புகளையும் வழங்கும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நேற்று(18) இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.