(FASTNEWS| COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிப்பதற்கு கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாக, கட்சியின் பொதுச்செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
நேற்று(26) இரவு ஜனாதிபதியின் தலைமையில் கூடிய மத்திய சபை கூட்டத்திலேயே குறித்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.