(FASTGOSSIP | COLOMBO) – ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட ஆசன அமைப்பாளர்கள் 24 பேர் குறித்த கட்சியில் இருந்து விலகி பிறிதோர் அரசியல் கட்சியுடன் இணைய தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய, சரத் அமுனுகம, ஷ்ரியாணி விஜேவிக்கிரம, நந்திமித்ரா ஏகநாயக்க பராக்கிரம, ஆதாவுத செனவிரத்ன, சுமித்ரா ப்ரியங்கனி அபேதீர, ஜானக சூரியபண்டார, உபுல் பெரேரா, ஹேமால் குணசேகர, காமினி திலகசிறி ஆகியோர் இதில் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.