இலங்கைக்கு 10,000 மெட்ரிக் தொன் அரிசியினை இந்தோனேசியா அரசு நன்கொடையாக வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க மேற்குறித்த உதவியினை வழங்க இந்தோனேசிய அரசு தீர்மானித்துள்ளது. குறித்த தொகையான அரிசியானது எதிர்வரும் சில வாரங்களுக்குள் இலங்கைக்கு கிடைக்கப்பெறவுள்ளது.