ஜனாதிபதியின் தீர்மானத்தை சபாநாயகருக்கு மீறுவதற்கு அதிகாரம் கிடையாது – முன்னாள் சபாநாயகர்

அரசியலமைப்பின் பிரகாரம் தான் விரும்புபவரை பிரதமராக நியமிக்கக் கூடிய அதிகாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு காணப்படுகின்றதாக ஜனாதிபதி செயலகத்தில் இன்று(03) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் முன்னாள் சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம்.லொக்குபண்டார தெரிவித்துள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்தும் தெரிவிக்கையில்;

“…தற்போது மஹிந்த ராஜபக்ஷவே இந்நாட்டின் பிரதமராவார். ஜனாதிபதியின் தீர்மானத்தை மீறி யாராலும் செயற்பட முடியாது. சபாநாயகருக்கும் அந்த அதிகாரம் கிடையாது என்பதும் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது..” என தெரிவித்துள்ளார்.