(FASTNEWS | COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அமைச்சுப் பதவி வகிக்கும் மகாவலி அபிவிருத்து மற்றும் சுற்றாடல் அமைச்சின் பிரதான தொலைபேசிகள் சில நேற்று முதல் துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு துண்டிக்கப்பட்டுள்ள தொலைபேசிகளில் அமைச்சரான ஜனாதிபதியின் தொலைபேசி, இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னெபெருமவினது தொலைபேசி, அமைச்சின் செயலாளரது தொலைபேசி உள்ளிட்டவை அடங்குகிறதாக தெரிவிக்கப்படுகின்றது.
தொலைபேசி கட்டணப் பட்டியல் நிலுவையினை கட்டத்தவறியமையே இதற்கு காரணம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.