முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருநாணாயக்க விரைவில் கைது செய்யப்படுவார் என நெருங்கிய செய்தி வட்டாரங்களில் செய்திகள் கசிந்துள்ளன.
ஜனாதிபதி செயலக அதிகாரி ஒருவர் இயக்கும் இணையம் ஒன்று குறித்த இந்த தகவலை கசியவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மத்திய வங்கி முறி மோசடியை விசாரணை செய்த ஆணைக்குழுவிடம் பொய் சாட்சியம் வழங்கிய குற்றச்சாட்டில் இந்த கைது இடம்பெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள அதேவேளை இந்த கைது விரைவில் இடம்பெறும் என தகவல் கசிந்துள்ளது.
இவர் ஜனாதிபதியின் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
#g-reeshma