(FASTNEWS|COLOMBO) – இலங்கை வாழ் முஸ்லிம் மக்கள் இன்றைய தினம்(05) புனித நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றனர்.
நாட்டின் பல பாகங்களிலும் நேற்றைய தினம்(04) தலைப்பிறை தென்பட்டதாக கிடைக்க பெற்ற ஆதாரங்களை அடுத்து இந்த அறிவிப்பை கொழும்பு பெரிய பள்ளிவாசல் பிறைக்குழு வெளியிட்டது.
ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட பலரும் தமது வாழ்த்துச் செய்திகளை பகிர்ந்துள்ளனர்.
அடுத்தவர்களது பசியின் துயரத்தை அனுபவபூர்வமாக உணர்ந்து அவர்களுக்கும் கொடுத்து வாழ்வதற்கு பழக்கும் ஒரு சமயத்தை பின்பற்றும் ஒரு சமூகம் உண்மையில் மனித குலத்திற்கு கிடைத்த கொடையாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன விடுத்துள்ள ரமழான் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
ரமழான் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள வாழ்த்து செய்தி பின்வருமாறு:
