ஜனாதிபதியின் பதவி காலம் ஐந்து வருடங்களில் முடிவடையும் என உயர் நீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழு அறிவித்துள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தனது ஆட்சிக்காலம் எத்தனை வருடங்களுக்குரியது என அறிவிக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை விடுத்திருந்தார். அதன் பின்னரே உயர் நீதிமன்றம் தனது முடிவை ஜனாதிபதிடம் தெரிவித்துள்ளது.
ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழுவின் மூலமே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.