அரச உயர்பதவிகள் 04 இற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சற்றுமுன்னர் பதவியேற்புகள் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்டின் பெர்ணான்டோ, ஜனாதிபதியின் புதிய செயலாளராகவும், கிழக்கு மாகாண ஆளுநராக ரோஹித போகொல்லாகம நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், புதிய இராணுவ தளபதியாக முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் கிரிஸாந்த டி சில்வா பாதுகாப்பு படைகளின் பிரதானியாக பதவி உயர்வு பெற்றுள்ளதோடு, புதிய இராணுவ தளபதியாக மேஜர் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
