ஜனாதிபதியுடனான சந்திப்பையடுத்து பெற்றோலிய ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது

எரிபொருள் கூட்டுத்தாபன பணியாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு இன்று முற்பகல் 11.30 மணியளவில்  ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து உத்தேச போராட்டத்தை முன்னெடுக்க போவதில்லை என, எரிபொருள் கூட்டுத்தாபன பணியாளர்கள் சங்கத்தின் இணைப்பாளர் டீ.ஜே. ராஜகருணா கூறியுள்ளார்.