ஜனாதிபதி அவுஸ்திரேலியாவுக்கு விஜயம்..

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தியோகபூர்வமாக இன்று(23) அவுஸ்திரேலியாவுக்கு விஜயமாகியுள்ளார்.

இரு நாட்கள் அங்கு தங்கியிருக்கும் அவர், இதன்போது அந்த நாட்டுப் பிரதமர், அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இன்னும், இலங்கை ஜனாதிபதி மற்றும் அவுஸ்திரேலியப் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு எதிர்வரும் 25ம் திகதி இடம்பெறவுள்ளது.

மேலும், மைத்திரிபால சிறிசேன தலைமையிலான குழுவினர் 26ம் திகதி சிட்னிக்கு சென்று இலங்கை வர்த்தகர்களுடன் கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய பாதுகாப்பு அமைச்சரை ஜனாதிபதி சந்திப்பார் எனவும் தெரிய வந்துள்ளது.

 

(rizmira)