ஜனாதிபதி ஆணைக்குழுவில் எதிர்வரும் 07ம் திகதி வரை முறைப்பாடுகளை கையளிக்க வாய்ப்பு…

அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இலஞ்சம், ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள், அரச சொத்துக்களை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பான முறைப்பாடுகளை மாத்திரம் தமது ஆணைக்குழுவில் முன்வைக்குமாறு, ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

அதன்படி, முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் இறுதி திகதி, அடுத்த மாதம் 07 ஆம் திகதியுடன் நிறைவு பெறுவதாகவும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு மேலும் குறிப்பிட்டுள்ளது.