(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத் திட்டத்தின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக இன்று(30) யாழ்ப்பாணதிற்கு விஜயம் செய்யவுள்ளார்.
நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலுக்கு அமைய நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
வேலைத் திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் இன்று(30) யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.