ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினை பலப்படுத்தும் நோக்கில் கூட்டமைப்பினை பிரதிநிதித்துவம் செய்யும் அனைத்து கட்சிகளையும் சந்திக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(30) இரவு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வருகை தருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறித்த கட்சியின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சியை பலப்படுத்துவது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சிகளின் பரிந்துரைகளையும் யோசனைகளையும் கோரியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
மேலும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் சுமார் 30 கட்சிகள் அங்கம் வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.