ஜனாதிபதி கோட்டாபயவிற்கு இம்ரான் கான் வாழ்த்து

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 7ஆவது புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஸவுக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இரண்டு நாடுகளுக்குமிடையிலுள்ள வலுவான உறவை மேலும் பலபடுத்தும் வகையில் இலங்கையின் புதிய ஜனாதிபதியுடன் தொடர்ந்தும் வெற்றிகரமான உறவுகள் முன்னெடுத்துச் செல்லப்படுமென்றும் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த வாழ்த்து செய்தியை தனது டுவிட்டர் பக்கத்தில் கோட்டாபய ராஜபக்ஸவுக்கு பிரதமர் இம்ரான் காண் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார்.