(FASTNEWS | COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிறைவேற்று அதிகாரத்தை சர்வாதிகாரமாக பயன்படுத்தக் கூடாது என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கிய விவகாரத்தில் ஜனாதிபதி சர்வாதிகாரமாக செயற்பட்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
நீதிமன்றை அவமரியாதை செய்த குற்றத்திற்காகவே ஞானசார தேரருக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கியமையானது நீதிமன்றின் சுயாதீனத்தன்மைக்கு சவால் விடுக்கும் வகையிலானது எனவும் குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.