ஜனாதிபதி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்

(FASTNEWS|COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று(02) அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதன்போது, சீனாவில் இருந்து சிகரட் இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளமை தொடர்பாக முக்கிய அவதானம் செலுத்தப்படவுள்ளதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பு – முகத்துவாரம், மஹாவத்தை பகுதியில் எரிபொருள் விநியோக குழாய் அமைக்கப்படுவதால் பாதிக்கப்படுகின்ற குடும்பங்களுக்கு நட்டயீடு வழங்குவது தொடர்பாகவும் அமைச்சரவைக் கூட்டத்தில் அவதானம் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.