(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இடையே இன்று(19) காலை இடம்பெற்ற விசேட சந்திப்பின் பிரகாரம் இன்று(19) பிற்பகல் 3.00 மணிக்கு விசேட அமைச்சரவை கூட்டம் ஒன்றை நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிப்பது தொடர்பான விசேட அமைச்சரவை இன்று அமைச்சரவையில் விவாதிக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.