ஜனாதிபதி தலைமையில், இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிக்க தேசிய செயற்பாட்டு திட்டம்..

(FASTNEWS | COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிப்பதற்கான 05 ஆண்டுகளைக் கொண்ட தேசிய செயற்பாட்டுத் திட்டம் கொழும்பில் இன்று(18) உத்தியோகபூர்வமாக இந்த திட்டம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

2019ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியை உள்ளடக்கியதாக குறித்த இந்தத் திட்டம் அமையவுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு தொடர்பான தேசிய செயற்பாட்டுத் திட்டம் மற்றும் 4 கையேடுகளும் சிங்களத்தில் தயாரிக்கப்பட்டு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

அதன்படி, 15 புத்தகங்கள் வெளியிடப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.