(FASTNEWS|COLOMBO)- சத்விரு அபிமன் படைவீரர் பயன் வேலைத்திட்டத்தின் கீழான பிரதான வைபவம் கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் இன்று(22) இடம்பெறவுள்ளது.
இந் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன் பிரதம அதிதியாகக் கலந்து கொள்ள உள்ளதுடன் இதன்போது, 1500 படைவீரர்கள் இந் நிகழ்வில் நன்மையடையவுள்ளனர். மற்றும் படைவீரர்களுக்காக வீடமைப்பு நிதியுதவியும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
படை வீரர்களின் குடும்பங்களின் பிள்ளைகள் மத்தியில் திறமைகளை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களும் இந் நிகழ்வின போது வழங்கப்பட உள்ளன.