ஜனாதிபதி தலைமையில் சு.கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கும் அழைப்பாணை

சுதந்திரக் கட்சியின் சகல தொகுதி அமைப்பாளர்களும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கொழும்பில் கட்டாயமாக பிரசன்னமாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் விசேட கூட்டமொன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் சுதந்திரக் கட்சியில் பதவிகளை வகிப்போருக்கும் இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் வேட்பாளர் தெரிவு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.