(FASTNEWS – COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் பங்களிப்புடன் தேசிய இராணுவ வீரர்கள் தினமானது, எதிர்வரும் 19 ஆம் திகதி 4.00 மணிக்கு பத்தரமுல்லையில் இடம்பெறவுள்ளது.
கடந்த யுத்த காலத்தில் நாட்டிற்காக உயிர்நீத்த இராணுவ வீரர்களை நினைவு கூறும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இராணுவ சேவை அதிகார சபையின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் பிரியங்க நாப்பாகொட தெரிவித்திருந்தார்.