ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கும், சுதந்திர கட்சியின் தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்று நடைபெறவுள்ளது.
இதற்காக அனைத்து தொகுதி அமைப்பாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
இன்று இரவு 7 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறவுள்ளதாக, சுதந்திரகட்சியின் இளைஞர் முன்னணியின் தலைவரும், முன்னாள் பிரதி அமைச்சருமான சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இதன்போது கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.