ஜனாதிபதி, தூதுவர்களுக்கும் – உயர் ஆணையாளர்களுக்கு தெளிவுபடுத்தினார்…

நாட்டில் நிலவும் அரசியல் சூழ்நிலை தொடர்பில் வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர் ஆணையாளர்களுக்கு தெளிவுபடுத்த நேற்று(29) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்திருந்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கையில் உள்ள அனைத்து வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் உயர் ஆணையாளர்கள் ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் ஒன்றுகூடிய வேலை, அவர்களுடன் ஜனாதிபதி குறித்த அரசியல் நிலை குறித்து கலந்துரையாடியுள்ளார்.