(FASTNEWS | COLOMBO) – எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் வெற்றிக்காக எந்தவொரு கட்சியுடனும் இணைந்து செயற்பட தயாராக உள்ளதாக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும் , முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி வேட்பாளராக எவரை பெயரிட்டாலும் அவருக்கு ஆதரவளிக்க தயாராக உள்ளதாகவும் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ களுத்துறையில் இன்று(09) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட போது தெரிவித்திருந்தார்.