ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் முதலாவது கூட்டம் இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று(25) பிற்பகல் சந்திப்பு ஒன்று இடம்பெறவுள்ளதாக ஆணைக்குழுவின் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர் முதற் தடவையாக தேர்தல்கள் ஆணைக்குழு முதன் முறையாக குறித்த இந்த கலந்துரையாடலை நடத்துகின்றது.

தேர்தலுக்கு பின்னரான செயற்பாடுகள் குறித்து இதன்போது கலந்துரையாடப்படும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.