ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் இன்று(23) முற்பகல் 10.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.
நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்து இந்த சந்திப்பில் கவனம் செலுத்தப்பட உள்ளதோடு, மத்திய வங்கியின் சர்ச்சைக்குரிய பிணை முறி மோசடி குறித்த அறிக்கை, பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்திய 34 அறிக்கைகளை நாடாளுமன்றில் சமர்ப்பித்தல் போன்ற விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
#rizma