ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று (31) நண்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
இதன்போது, தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாகவும், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு அடிப்படையாக அமைந்த விடயங்கள் தொடர்பிலும் அமைப்பாளர்களுக்கு
தெளிவுபடுத்தினார்.
மேலும், இதன்போது புதிய அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்க ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அனைத்து அமைப்பாளர்களும் தங்களது விருப்பத்தை தெரிவித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.