ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை(23) சிங்கப்பூர் பயணம்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணமாக நாளை(23) சிங்கப்பூர் நோக்கி பயணமாக உள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜனாதிபதி எதிர்வரும் 27ம் திகதி வரையில் சிங்கப்பூரில் தங்கி இருப்பார் என்றும், குறித்த காலப் பகுதியில் சிங்கப்பூர் இராஜதந்திரிகளுடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.