ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று(07) கம்போடியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்

(FASTNEWS | COLOMBO) – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நான்கு நாட்கள் பயணமாக இன்று(07) கம்போடியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கம்போடிய மன்னர் நொரொடோம் சிகாமணியின் அழைப்பின் பேரில் நொம்பென்னுக்கு வரும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு, மன்னரின் அரச மாளிகையில் வரவேற்பு அளிக்கப்படும் என கம்போடிய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

கம்போடிய பிரதமர் ஹூன் சென்னுடன் இருதரப்பு பேச்சுக்களையும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நடத்தவுள்ளார்.