ஜனாதிபதி மைத்திரிபால தலைமையில் ‘சயுரால’ கப்பல் செயற்பாடு  ஆரம்பம்  

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தியாவிடம் இருந்து புதிதாகக் கொள்வனவு செய்யப்பட்ட ‘சயுரால’ என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கும் வைபவம் நேற்று கொழும்பு துறைமுக கிழக்கு கொள்கலன் முனையத்தில் நடைபெற்றது.
 இக்கப்பலின் கட்டளை அதிகாரியாக கப்டன் நிசாந்த அமரோச நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக கப்டனுக்கான ஆணையிடும் அதிகாரத்தை வழங்கியதுடன்  கப்பலின் பெயர்ப்பலகையையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  திறந்து வைத்தார். அத்துடன் நின்றுவிடாது கப்பலின் இயந்திர அறைக்குள் சென்று அதன்  செயற்பாடுகளைப் ஜனாதிபதி பார்வையிட்டார்.